Tuesday, January 3, 2012

இந்திய அணியின் கேப்டன்

                இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி சர்வதேச விளையாட்டு பத்திரிகை சங்கத்தின்'நேர்மையான வீரர்' விருதை தட்டிச் சென்றிருக்கிறார். கடந்த ஆண்டு டிரன்ட்பிரிட்ஜில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் இயான் பெல் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானாராம். மூன்றாவது நாள் ஆட்டத்தில், தேநீர் இடைவேளைக்கு முன், தான் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றதாக நினைத்து, "பெவிலியன்' நோக்கி நடந்தாராம். உண்மையில் பந்து, எல்லைக் கோட்டை கடக்கவில்லையாம். இதையடுத்து இவரை தோனி 'ரன் அவுட்' செய்தார். இது கிரிக்கெட் விதிமுறைப்படி சரி என்பதால், அம்பயரும் 'அவுட்' கொடுத்தாராம். ஆனால், விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்ட தோனி, 'அப்பீலை' திரும்ப பெற்று, பெல்லை மீண்டும் 'பேட்' செய்ய அனுமதித்தாராம். அதனால் தோனியின் இந்த செயலை பாராட்டி ஏ.ஐ.பி.எஸ்., நேர்மையான வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனை பெறும் உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இது குறித்து ஏ.ஐ.பி.எஸ்., பொதுச் செயலர் ரோசலின் மோரிஸ் கூறுகையில், 'நேர்மையான வீரர் விருதை முதல் முறையாக கிரிக்கெட் வீரருக்கு வழங்குகிறோம். இது இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையும் என்றும் விருது வழங்கும் விழா வரும் ஜன.13ம் தேதி ஆஸ்திரியாவில் நடக்க உள்ளது என அவர் தெரிவித்தார் மேலும்

தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால், இதில் தோனி கலந்து கொள்ள முடியாது. எனவே, இவருக்கு நினைவுப் பரிசை மட்டும் வழங்கியுள்ளோம். விருதுக்கான கோப்பை வரும் ஏப். 4ம் தேதி ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழாவில் வழங்கப்படும்' என்றார்.

.......................நல்ல ஆட்டகாரனுங்க டோனி
.....................................விரைவில்  சந்திப்போம்   ......காங்கேயன்

0 comments:

Post a Comment