Friday, April 26, 2013

சரி இனி தொடரலாம் ............

என்னடா ரொம்ப நாளா காணாம பொயடேனு  நினைக்காதீங்க  இனி என்னோடு ப்லோகே பார்க்கலாம் பற்பல சங்கடம்  அதனால் எழுத முடியலே  சரி இனி  தொடரலாம் ............

Monday, April 9, 2012

'ஸ்ரீ ராமராஜ்யம்'

                                    நயன்தாரா தனது கடைசிப் படமாக அறிவித்த தெலுங்குப் படம் 'ஸ்ரீ ராமராஜ்யம்' வரும் ஏப்ரல்20ஆம் தேதியன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறதாம்.தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்தப் படம் 'ஸ்ரீ ராமராஜ்யம்' இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் நயன்தாரா கண்ணீர் விட்ட கதையெல்லாம் இருக்கிறது.இப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார்களாம் . தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 13ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால்  இப்படத்தின் டப்பிங் வேலைகள் முடியவில்லை. அதனால் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியன்று இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்து இருக்கிறது. இப்படத்தை தான் நயன்தாரா தனது கடைசிப் படம் என்று கூறினார்.............ஆனால், தற்போது மூன்று படங்களில்   நடித்து வருகிறார் அம்மணி...............

........................................இந்த சீதை (சீதையா?)


தலை எழுத்துடா  சாமி .......................................... காங்கேயன்

Friday, March 16, 2012

அனைவருக்கும் வணக்கம் நீண்ட இடைவெளிக்கு அப்பறம் வலைப்பூவில் ஏதாவது எழுதலாம்னு நினைச்சேன் சுவையான  செய்தி ஒன்று உங்களுக்காக காத்துகொண்டிருகிறது........................

விரைவில் சந்திப்போம்  .............................................................. காங்கேயன்

Monday, January 23, 2012

யாராவது யாரையாவது மயிருன்னு சொல்லுவார்களா என்ன

                    இனிமேல் யாராவது யாரையாவது மயிருன்னு சொல்லுவார்களா என்ன, மயிரின் மதிப்பு கூடிஉள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.
                  இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கலம். இந்த தலைமுடி விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு பல நூறு கோடி வருமானம் கிடைக்கிறதாம். இந்த நிலையில் தற்போது தேவஸ்தானத்திடம் 150 டன் அளவுக்கு தலைமுடி இருப்பு உள்ளதாம். இதை ரூ.100 கோடிக்கு ஏலம் விட தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம்.
               இந்த முடியை பல ரகமாக பிரித்துள்ளனராம். கடந்த ஆண்டு தலைமுடி ஏலம் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.130 கோடி வரை வருமானம் கிடைத்ததாம்.
   ..............................விரைவில் சந்திப்போம் .....................................காங்கேயன்

Wednesday, January 11, 2012

விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள்


விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார்கள். இவர்களது சக கல்லூரி மாணவன் சத்யன். கல்லூரி முதல்வர் சத்யராஜ். அவரது மகள் இலியானா. படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருகிறார் விஜய். எப்போதும் கடைசியில் வருபவர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா. சத்யராஜின் கண்டிப்பு விஜய்க்கு பிடிக்கவில்லை.  சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். காணாமல் போன விஜய் என்னவானார், ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் அவரை கண்டுபிடித்தார்களா என்பதே படத்தின் கதை.

விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். முந்தைய படங்களில் உள்ள பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும்,  இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார். ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும். படத்தின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது.

இலியானா சும்மா பார்க்கும் போதே கிக்கு ஏற்றுகிறார். என்ன வளைவு நெளிவு. அருமையான ஸ்ட்ரக்சர், ஆனால் முகம் தான் வத்தலாக முற்றிப் போய் இருக்கிறது. வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி

சைதாப்பேட்டை மன்னிக்கவும் எனக்கு பழைய நியாபகம் வந்துவிட்டது

      

சைதாப்பேட்டை சென்னை  மாநகராட்சியில் உள்ள ஒரு முக்கிய புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கிய பகுதிகள் திநகர், நந்தனம், சின்னமலை ,கிண்டி ,ஈகாடுதாங்கள் மற்றும் கேகேநகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணாசாலை  இப்பகுதி வழியாக தான் செல்கிறது.

இங்கு மிக பழமையான ஆசிரியர் பயிற்சி நிலையம் உள்ளது. இது இருக்கும் பில்டிங் ஆனது வெள்ளக்காரன் கட்டிய கட்டடம் ஆகும். அதே வளாகத்தினுள் இரண்டு அரசு பள்ளிகளும், அரசு குடியிருப்புகளும் இருக்கிறது


1.Jai Gopal Garodia Government Girls Higher Secondary School

School at Saidapet

2.Government Model Higher Secondary School

School at Saidapet

3.St. Francis Xavier Middle School

School at Saidapet

3.The Ashram Group Of Institutions

School at Saidapet

4.Geetha Matriculation Higher Secondary School

School at Saidapet

5.Fathima Matriculation Higher Secondary School

School at Saidapet

6.Cambridge Matriculation Higher Secondary School

School at Saidapet

7.St Anthonys Matriculation Higher Secondary School

School at Saidapet

8.Corporation Boys Higher Secondary School

School at Saidapet West

9.St Marys Matriculation Higher Secondary School

School at Jafferkhanpet


இவை அனைத்தும்  சைதை பகுதில் இருக்கும் பள்ளிகள் ஆகும்.



சைதாபேட்டைஇல் இருக்கும் கோயில்கள்


காரணீஸ்வரர் கோயில், இக்கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமானதுவும் ஆகும். இங்குள்ள அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. இங்கு அழகான தெப்பக்குளம் உள்ளது.

முருகர் கோவில், கடும்பாடி அம்மன் கோவில், சௌந்தரேஸ்வரர் கோவில், 
லக்ஷ்மி நாராயணர் கோவில்

இவை அனைத்தும் சைதை பகுதில் இருக்கும் கோயில்கள் ஆகும்.

சைதாபேட்டையை இரண்டாக பிரிப்பது ரயில்வே சாலை ஆகும் (West Saidapet - East Saidapet) மேலும் இங்கு ஜெயராஜ், சீனிவாசா இரண்டு சினிமா தியேட்டர்கள் இருந்தன ஆனால் இப்போது ஜெயராஜ் என்ற தியேட்டரினை இடித்துவிட்டனர்.

இங்கிருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே ஆகா வேண்டும் சைதாபேட்டையில் மூன்று மார்க்கெட்கள் இருக்கிறது எதில் பெரிய மார்க்கெட் ஆனது ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இருக்கிறது இங்கு அணைத்து விதமான பொருட்களும் இங்கே கிடைக்கும். குண்டூசியில் தொடங்கி குப்பை தொட்டி வரை இங்கே கிடைக்கும்.

 மற்றுமிருக்கும் 2 மார்க்கெட்களும் சற்று சிறிதானது

1  வெஸ்ட்ஜோன்ஸ் ரோட்டிலும்

2  மேட்டுப்பாளையம் மார்க்கெட்

சைதாபேட்டையில் இருக்கும் பாலத்தை நான் மறக்கவே முடியாது படிக்கும் பொது கட் அடித்து விட்டு அந்த பலதிர்ற்கு அருகில் இருக்கும் எனது நண்பர்கள் வீட்டில் தான் இருப்பேன், மேலும் சைதாபேட்டையில் மூன்று சப்வேக்கள் இருக்கிறது அதில் இரண்டு புதியது ஒன்று பழையது அதன் பெயர் அரங்கநாதன் சுரங்கபாதை

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஏனென்றால் நான் ஐந்தாம் வகுப்பு முதல் இங்குதான் படித்தேன்

நான் டியூஷன் படித்தது, ஸ்கூல் படித்தது , எனது அண்டை வீட்டு நண்பர்கள், மசூதி தோட்டம், குயவர் தெரு, சூடியம்மன் பேட்டை, ஐம்பது பைசா  வடை, தேவி மாரியம்மன் கோயில் தாத்தா.....................etc....etc........

மன்னிக்கவும் எனக்கு பழைய நியாபகம் வந்துவிட்டது அடுத்த பதிவில் சந்திப்போம் .......................காங்கேயன் 

Tuesday, January 10, 2012

நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் போன்றது ....


அடுத்த நிமிடம் நான் உயிரோடு இருப்பேன்  என்பது  எனது  நம்பிக்கை......

கணவன் நம்மை நல்லா வச்சிருப்பான் என்பது மனைவியின் நம்பிக்கை......

கருவில்  இருக்கும் சேய்க்கு  தாயின் மீது நம்பிக்கை .......

சச்சின் நூறாவது சதம் அடிப்பாரென்பது ரசிகர்களின் நம்பிக்கை......

தனக்காக உயிரயும் கொடுப்பான் என்பது நண்பனின் நம்பிக்கை

எஜமானர்  உணவுகொடுப்பார் என்பது நாயின் நம்பிக்கை ......

பசி உள்ளவனுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்று நம்பிக்கை.....

வேலை இல்லாதவனுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை....

காவிரியில் இருந்து  தண்ணீர் வரும் என்பது விவசாயிகளின்  நம்பிக்கை.....


ஆகவே நம்பிக்கை  உயிர் போன்றது என்பதை நாம் நம்புவோம்

                        ....................விரைவில் சந்திப்போம் காங்கேயன்