Tuesday, January 10, 2012

ரஞ்சித்தின் 'அட்டகத்தி'

                தமிழ் சினிமாவின் தலைநகரமாக சென்னை விளங்கினாலும், ஏராளமான திரைப்படங்களின் கதைகளம் சென்னை தவிர்த்த பகுதிகளாகத்தான் இருக்கும். இருபீனும் ஒரு பக்கம் இப்படி சென்னையை கண்டுகொள்ளாமல் இருந்தாலும்,சில இயக்குநர்கள் தயவால் அவ்வப்போது சென்னையும் சில திரைப்படங்களில் தலை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது மற்றொரு புதுமுக இயக்குநரும் அந்த சிலருடன்  இனைகிராராம் .சென்னையை  கதைகளமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் 'அட்டகத்தி'.
                 படத்தின் பாடல்களும், டிரைலரும் இது சார்ப்பான கத்தி என்பதை புரிய வைத்ததாம். வட சென்னையில் இருந்து கல்லூரிக்கு வரும் இளைஞனின் காதல் காவியம்தான் இந்தப் படம். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ப.ரஞ்சித் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறாராம்.

              இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரையிடப்பட்ட பாடல்களும் சரி, மேடையில் இசைக்கலைஞர்கள் நேரடியாக பாடிய பாடல்களும் சரி அத்தனையும் ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் படி இருக்கிறதாம் . குறிப்பாக கபிலன் எழுதி, கானா பாலா பாடியிருக்கும் "ஆடி போன ஆவணி இவ ஆல மையக்கும் தாவனி..." என்ற  பாடல் சற்று துள்ளலான பாடலாம்.

               இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த ஜாக்பாட் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையை இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறதாம்.

          ஹீரோவாக தினேஷ் என்பவர் அறிமுகமாக, இவருக்கு ஜோடியாக நந்திதா, ஐஸ்வயா, ஷாலி ஆகிய மூன்று பெண்கள் நடிகிரார்களாம். படத்தில் இடம்பெறும் அத்தனைப் பேரும் அனியாயத்திற்கு சாதரண முகங்களாக இருக்கிறார்கள். இப்படி கதைக்கான பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலும் இப்படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே சொல்ல வேண்டுமாம்.
.............................விரைவில் சந்திப்போம் ........காங்கேயன்

0 comments:

Post a Comment