Wednesday, December 28, 2011

இந்தியாவில் மிக உயரிய விருது

     
                       இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்கும் வகையில் அதன் விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ளதாம். இதனால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.

                           சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உலக செஸ் சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, 'விளையாட்டு வீரர்களும் பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிருக்கிறார். இந்த விருது எனக்கு கிடைத்தால் அது மிகப்பெரிய பாக்கியமாக கருதுவேன் என்று அவர் கூறினாராம்.

இந்த விருதுக்கு பொருத்தமான விளையாட்டு வீரர்கள் வேறு யாரும் உண்டா? என்று கேட்கப்பட்ட போது, அவர் யார் பெயரையும் குறிப்பிட மறுத்து விட்டாராம். மேலும் ஆனந்த் கூறுகையில், 'அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பான்டுடன் மோத உள்ளேன்.

இது மிகவும் கடினமான போட்டியாக இருக்கும். இருப்பினும் நிபுணர்கள், இதில் நான் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அது பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த போட்டிக்கு தயாராகுவதற்கு 4 மாத கால அவகாசம் உள்ளது. போட்டிக்கு தயாராகும் பணியை அடுத்த மாதம் தொடங்குவேன்' என்றாராம்.

1 comments:

Anonymous said...

மயிருல அருமை நீ யாருடா அவன் ஊர்க்காரனா, அதான் ரெண்டு பேரும் சேர்ந்து காப்பியடிச்சி பொழக்கறீங்களா? உங்களுக்கு வெக்கமாயில்லை.

Post a Comment