Tuesday, January 10, 2012

அரசின் இந்த போக்கு கண்டிக்க தக்கது


               பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் எண்ணமில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளததாம். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் எண்ணம் ஏதும் இல்லயாம்.

            பேருந்து கட்டணத்தை உயர்த்துவது என்பது தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாம். அரசின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் பொருளாதார நெருக்கடியால் தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக உள்ளது என தமிழக அரசு தனது பதிலில் கூறியுள்ளதாம்.
               அரசின் இந்த போக்கு கண்டிக்க தக்கது ஏனெனில் போக்குவரத்து துறையில் செய்த விலையேற்றத்தை டாஸ்மாக்கில் மதுக்களில் ஏற்றியிருக்கலாம் அல்லது  ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து பிடுங்கி இருக்கலாம் அதை விடுத்து பொது மக்களின் அன்றாட செலவுகளில் திணிப்பது சரிஅல்ல இது கண்டிக்க தக்கது.

...........................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தஞ்சை குமணன் said...

அருமை

Post a Comment